×

கணவருடன் தொடர்பு வைத்த பெண் மீது சரமாரி தாக்குதல்

சேலம், மார்ச் 25: சேலம் ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கமலா (47). அதேபோல் சத்யா நகரை சேர்ந்தவர் தங்கம்மாள்(50). இவர் கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்தில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கமலா, தங்கம்மாளின் வீட்டுக்கு சென்றார். அப்போது திடீரென அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து தங்கம்மாளை சரமாரியாக  தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த தங்கம்மாள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், உதவி கமிஷனர் முருகேசன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதில், தங்கம்மாள், கமலாவின் கணவருடன் கடந்த 10ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இது தற்போது தான் கமலாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த கமலா அவரை கடுமையாக தாக்கியது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கமலா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Volley ,
× RELATED நாகை அருகே நடுக்கடலில் நள்ளிரவில்...